தாகூர் சிந்தனை வரிகள் - தமிழ்
Tagore inspirational words in tamil
தாகூர் சிந்தனை வரிகள் - தமிழ்
Tagore inspirational words in tamil
தாகூர் சிந்தனை வரிகள் - தமிழ்
Tagore inspirational words in tamil
தாகூர்
1. செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்காந்திராதே.நீ விரும்பும்
கடவுள் இங்கேயில்லை.அதோ புளித்த பாடிய வியர்வை வடிய நிலத்தை உழுது படுபடுகிறானே விவசாயி
அவனிடம் இருக்கிறார்.
2. குழம்பிற்காக மிளகாய்ப்பொடி எப்படி அவசியமோ அப்படி காதல்
வகையிலும் சற்று கோபதாபம் அவசியம் இருக்க வேண்டும்.இல்லாவிடில் அது ரசிக்காது.
3. உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காதீர்கள்.
4. முயற்சி என்பது இதயத்துக்குள் மூளும் வெறும் உணர்வு மட்டுமல்ல.ஆற்றலை
கிளப்பும் ஒரு தூண்டுகோல் அது.
5. சீர்தூக்கி பாக்கும் ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் அதனால்
விளையும் தீங்கை வட்டியும் அசலுமாக நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
6. வீட்டுக்குள் ஒளி தரும் விளக்கே வீட்டை எரிக்கவும் செய்கிறது.
7. எல்லோரும் தம்மை விட்டு வேறோ யாரையோ சீர்திருத்த முயல்கின்றனர்.
8. ஒரு மலரையோ , ஒரு பட்டுப்பூச்சியையோ அதன் தோற்றத்தை கொண்டு
மதிப்பிட்டுவிடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது.
9. மனிதன் உலகோடு உள்ள உறவை உணராவிட்டால் அவன் வாழும் இடம் சிறைக்கூடம்.
10. துன்பம் என்பதை ஏதோ சார்பானது என்று என்ன வேண்டாம்.ஐயோ இதை
நாம் எப்படி வெல்வது என்றும் வருந்த வேண்டாம்.திறந்த மனதுடன் தலைநிமிர்ந்து அதை ஏற்றுக்கொள்வது உண்மையான மனிதனுக்கு அழகு.