தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 13
Tamil Haiku Kavithai - Part 13
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 13
Tamil Haiku Kavithai - Part 13
Tamil Haiku Kavithai - Part 13
121.ஓவியம்:
தூரிகையில்லா
ஓவியம்
வரைந்தவனை
தேடும்போது
யார் யாரோ மேகத்தில் !!
122.சிலை:
தெருமுனை
கடவுள் சிலை
தெருவிற்கு
எதுவும் செய்யாமல்
வழிப்போக்கனுக்கு
வழி காட்டியது !!
123.அரசியல்வாதி:
தேர்ந்தெடுக்கும்
மக்களே தெய்வம் என்று சொல்லி
வாக்கு கேட்டு வெற்றி பெற்ற பின்
நாத்திகனாய்
மாறி போவது ஏனோ?
124.மரணம்:
தொழிற்சாலையில்
சங்கொலி
எச்சரிச்கை
செய்தது
அருகில்
ஓடும் ஆற்று மீனுக்கு.
125.ஆயுட்காலம் :
நகர்புறவாசியின்
விழியில் சிக்கிய
மரத்திற்கு
குறைகிறது
ஆயுட்காலம்
!!
126.ரசிகன்:
நடிகனின்
கட்-அவுட்டுக்கு
ஊற்றிய பாலில் வழிந்து ஓடியது
ரசிகனின்
முட்டாள்தனம்.
127.நெடுஞ்சாலை:
நண்பர்களோடு
பயணம்
தூரமாகவே
இல்லை
நெடுஞ்சாலை
!!
128.உழைப்பு:
நா வறண்டு
நிற்கிறான்
தண்ணீர்
பாக்கெட் விற்பவன்...!
129.டாஸ்மார்க்:
நாட்டுக்கு
வருவாய்,
வீட்டுக்கு
செலவாய்,
.
130.காலணி:
நான் காலணி அணியவில்லை என்று
சலித்து
கொண்டு இருந்தேன்,
கால் ஊனமுற்ற ஒருவரை
பார்க்காதவரை.