Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 13

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 13

 Tamil Haiku Kavithai - Part 13







தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 13

 Tamil Haiku Kavithai - Part 13


Tamil Haiku Kavithai 121

Tamil Haiku Kavithai 122

Tamil Haiku Kavithai 123

Tamil Haiku Kavithai 124

Tamil Haiku Kavithai 125

Tamil Haiku Kavithai 126

Tamil Haiku Kavithai 127

Tamil Haiku Kavithai 128

Tamil Haiku Kavithai 129

Tamil Haiku Kavithai 130



 Tamil Haiku Kavithai - Part 13

121.ஓவியம்:

தூரிகையில்லா ஓவியம்
வரைந்தவனை தேடும்போது
யார் யாரோ மேகத்தில் !!
122.சிலை:

தெருமுனை கடவுள் சிலை
தெருவிற்கு எதுவும் செய்யாமல்
வழிப்போக்கனுக்கு வழி காட்டியது !!

123.அரசியல்வாதி:

தேர்ந்தெடுக்கும் மக்களே தெய்வம் என்று சொல்லி
வாக்கு கேட்டு வெற்றி பெற்ற பின்
நாத்திகனாய் மாறி போவது ஏனோ?

124.மரணம்:

தொழிற்சாலையில் சங்கொலி
எச்சரிச்கை செய்தது
அருகில் ஓடும் ஆற்று மீனுக்கு.

125.ஆயுட்காலம் :

நகர்புறவாசியின் விழியில் சிக்கிய
மரத்திற்கு குறைகிறது
ஆயுட்காலம் !!

126.ரசிகன்:

நடிகனின் கட்-அவுட்டுக்கு
ஊற்றிய பாலில் வழிந்து ஓடியது
ரசிகனின் முட்டாள்தனம்.

127.நெடுஞ்சாலை:

நண்பர்களோடு பயணம்
தூரமாகவே இல்லை
நெடுஞ்சாலை !!

128.உழைப்பு:

நா வறண்டு
நிற்கிறான்
தண்ணீர் பாக்கெட் விற்பவன்...!

129.டாஸ்மார்க்:
நாட்டுக்கு வருவாய்,
வீட்டுக்கு செலவாய்,
.
130.காலணி:
நான் காலணி அணியவில்லை என்று
சலித்து கொண்டு இருந்தேன்,
கால் ஊனமுற்ற ஒருவரை
பார்க்காதவரை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content