மலர்களின் வாசம் | உதவி | Help quotes in Tamil - 01
1.எந்தவொரு மெழுகுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்து விடுவதில்லை. எனவே, பிறருக்கு உதவுவதை நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் அது ஒன்றுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.
-அன்னை தெரசா
2.மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.
-சாணக்கியர்
3.மழையைப் போல பலன் எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும்.
-திருவள்ளுவர்
4.உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை!
-அன்னை தெரசா
5.நாம் பிறருக்கு உதவும் போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.
-கி.வீரமணி
6.நீங்கள் ஒரு உயர்ந்த சுய மதிப்பினை விரைவாக வளர்த்துக் கொள்ள விரும்பினால், முதலில் உங்களுக்கு எந்த வகையிலும் பிரதிபலன் செய்ய முடியாதவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.
-ஷிவ் கெரா
7.நாம் அனைவரும் ஒருநாள் மரணித்துப் போவது நிச்சயம். அதனால் வாழும் காலத்தில் பிறருக்கு உதவுவதை கடைமையாக கொண்டு வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்.
-லியோ டால்ஸ்டாய்
8.உதவியை என்றும் மறக்காதீர்கள், தீமையை உடனே மறந்துவிடுங்கள்.
-திருவள்ளுவர்
9.உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
-அன்னை தெரசா
10.உடனே கொடுத்தவன் இரு மடங்கு கொடுத்தவன் ஆகிறான்!
-சைரஸ்
11.உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்!
-சுவாமி விவேகானந்தர்
12.நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்! கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம்.
-ஔவையார்
13.ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய்.
-லாவோட்சு
14.கடவுள் நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருப்பது, ஒன்று பெற்றுக்கொள்ளவும் மற்றொன்று கொடுப்பதற்குமே.