Motivational Quotes about Father in Tamil - அப்பா பற்றிய தமிழ் மேற்கோள்கள்
1. ஒரு ஏழை மகனுக்கு நல்ல புத்தகம் தேவையில்லை! அப்பாவின் கஷ்டமான வாழ்க்கை அனுபவம் என்ற புத்தகம் ஒன்றே போதும் வாழ்வதற்கு!
2. அப்பா இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான் தெரியும், "அப்பான்னு" வார்த்தை அல்ல அது வாழ்கையின் பாடம் என்று..!
3. அம்மாவின் அன்ப தோசைமாதிரி! அப்பாவின் அன்பு தோசை கல் மாதிரி! தோசையின் ருசியை அறிகிற பலருக்கு, தோசைக் கல்லின் தியாகத்தை உணர முடிவதில்லை!
4. தான் உலியாக உருவாகி உன்னை செதுக்குவார் சிற்பமாய்! அவர் செதுக்கிய வார்த்தைக்களுக்கு நீ கொடுக்கும் அவ மரியாதையை தான் துவண்டு போனாலும் உன்னை கை விடாமல், கரை சேருப்பார் உன் வாழ்க்கையை... #அப்பா.
5. என்னை மட்டும் அல்ல, என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா!
6. அவருள் அத்தனை அன்பு என்னிடம் சொல்லாமலே மறைந்திருக்கும். எத்தனை துயர் வந்தும் எனக்கென அதை தாங்கியிருக்கும்..!
7. நீரோடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வேகம் அப்பாவின் உழைப்பே...
8. சில நேரம் பல வலிகளை மறக்க அப்பாவின் வார்த்தைகள் மட்டும் போதுமானதாக இருக்கின்றன!
9. அப்பாவின் அன்பு அவரைப் போலவே வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்று!
10. இப்படித்தான் இருக்க வேண்டும் என்றவர், இதயத்துடிப்பாய் நேசித்தவர், மகளின் திருமணத்தில் மறைமுக கண்ணீர் வடித்தவர், அம்மா என்ற மூன்றெழுத்து கவிதைக்கு முன்னால், அதிகம் ரசிக்க தவறிய மூன்றெழுத்து கவிதை அப்பா!
11. தன் பிள்ளையோட ஒரு வேளை பசிய போக்க, தன் உரையும் துச்சமாக நினைச்சு உழைக்கிற தெய்வம்! அப்பா!
12. மகனை கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா! மகனை கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர், சிறந்த அப்பா!
13. அம்மாவை விட அன்பு காட்ட ஒரு ஜீவன் இவ்வுலகில் இருக்கிறது என்றால், அது நம் அப்பா மட்டும்தான்!
14. எதை மறந்தாலும் மறக்கமுடியாத அன்பைக் கொடுத்தவர், என் அப்பா!
15. பல தடவை அம்மா சொல்லியிருப்பார்கள், பத்து மாதம் சுமந்த கதையை! ஆனால், ஒரு தடவை கூட அப்பா சொல்லி காட்டியதில்லை, இரவு பகலாக கஷ்டப்பட்டு வாழ்க்கை முழுவதும் நம்மை சுமந்த கதையை!
16. அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு புறம் இருந்தாலும், தான் அனுபவித்த கஷ்டங்களை தனது பிள்ளைகள் ஒரு போதும் அனுபவிக்க கூடாது என்று நினைப்பது தான் அப்பாவின் இதயம்!
17. தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், தந்தை கஷ்டப்படுவதை பிற்காலத்தில் பிறர் சொல்லித்தான் நமக்கே தெரியவரும்!