சச்சின் டெண்டுல்கர் சிந்தனை வரிகள் | Sachin Tendulkar Motivational Quotes in Tamil
1.நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை
2. நீங்கள் திட்டமிட்டது போல எப்பொழுதும் காரியங்கள் நடக்காது, அதற்காக சோர்வடையாமல் திட்டங்களுக்கு தேவையான முயற்சிகளை செய்து கொண்டே இருங்கள், அந்த முயற்சிகள் உங்களை பாதுகாக்கும்.
3. நமது பிரச்சனைகளுக்கு காரணமே நமது குழப்பமான மனநிலைதான்.
உங்களுடைய குழம்பிய மனது எதுவும் நடக்கும் முன்பே, இது நடக்குமோ அல்லது அது நடக்குமோ ஏறி உங்களை உங்களை பயமுறுத்தி கொண்டே இருக்கும்.
4. என் வாழ்நாள் முழுவதும் நான் எனக்காக ரன்னர் வைத்ததில்லை, என் பள்ளி வாழ்க்கையின்போது கூட வைத்ததில்லை.
ஏனெனில் எனக்கு மட்டும்தான் தெரியும் பந்து எங்கே செல்கிறது, நான் எவ்வளவு வேகமாக பந்தை அடித்தேன் என்பதெல்லாம் எனக்கு மட்டுமே தெரியுமே தவிர ரன்னருக்கு தெரிய வாய்ப்பில்லை.
5. நான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எப்போதும் இருந்தது, ஆனால் அது எப்பொழுதும் என் மீது அழுத்தத்தை செலுத்த நான் அனுமதித்ததில்லை.
6. உங்களை நோக்கி வரும் அனைத்து சிறிய சவால்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சிலசமயம் நீங்கள் பின்வாங்க வேண்டும் எப்பொழுது அது தேவைப்படுகிறதோ அப்போது அதை நோக்கி செல்லுங்கள்.
7. எனது இலக்கை நான் என்றுமே தீர்மானித்தில்லை, அதேபோல இலக்கை நோக்கி செல்ல வேண்டுமென்று என்னை நான் கட்டாயப்படுத்தி கொண்டதும் இல்லை.
8. உங்கள் கனவுகளை துரத்துவதை நிறுத்தி விடாதீர்கள்,
ஏனெனில் உங்கள் கனவுகள் நிச்சயம் பலிக்கக்கூடும்.
9. நீங்கள் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், அதைவிட முன்னேற முயற்சி செய்யுங்கள் தவிர முயற்சியை நிறுத்தி விடாதீர்கள்.
10. அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிக்க முக்கியமான வழி உறுதியாய் இருப்பது, உங்களின் உள்ளுணர்வுகளை பின்பற்றுங்கள் மற்றும் தெளிவாய் சிந்தியுங்கள்.
11. நான் சிலசமயம் வெற்றியடைந்திருக்கிறேன். சிலசமயம் தோல்வியடைந்திருக்கிறேன். இது ஒரு வாழ்க்கை தொகுப்பாகும். இந்த தொகுப்பு வெற்றி மற்றும் தோல்வி இரண்டும் கலந்ததாக உள்ளது.
12. அனைத்து துறையிலும் உயர்வும், தாழ்வும் இருக்கத்தான் செய்யும்.
எதுவாக இருப்பினும் முயற்சியை மட்டும் நிறுத்தக்கூடாது.
13. ஒரு அப்பாவாக, " சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரன் " என்று கேட்பதை விட
" சச்சின் ஒரு சிறந்த மனிதன் " என்று கேட்பதே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.