ஸ்ரீ அன்னை சிந்தனை வரிகள் – 03 | Sri Mother inspirational quotes - 03
21.உபயோகம் இல்லாத பேசப்படக்கூடிய ஒவ்வொரு சொல்லும் ஆபத்து நிரம்பிய வம்புப் பேச்சே!
22.எந்த முயற்சியை நீ செய்தாலும் அது ஒரு போதும் வீண் ஆவதில்லை. அதற்கு நிச்சயமாகப் பலன் கிடைத்தே தீரும். ஆனால் அந்த பலனை நம்மால் உணரமுடிவதில்லை.
23.இறைவனுடைய பணியிலே ஈடுபட்டிருப்பது தான் உன்வெற்றி அடைவதற்கு மிகவும் நிச்சயமான வழி.
24.குறிக்கோள் இல்லாத வாழ்வு என்பதே பரிதாபமான ஒரு வாழ்வாகும். உங்களுடைய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு.
25.உண்மையான ஞானம் பெறுவதற்குரிய நிபந்தனை என்னவென்றால் ஆரோக்கியமான பணிவுதான்.
26.எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருந்து முன்னேறுவதற்கு இன்னும் என்னென்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கவனி. நேரத்தை ஒரு கணமும் வீணடிக்காதே!
27.மிகவும் கடுமையான உடல் வேதனைகூட அதை அமைதியுடன் எதிர்கொள்ளும் போது கடுமை குறைந்து தாங்க கூடியதாக ஆகிவிடுகிறது.
28.கோபம் என்பது எப்போதுமே முட்டாள் தனமானவற்றைத்தான் பேச வைக்கும்.
29.யாராவது ஒருவர் உன்மீது கோபப்பட்டால், அவருடைய கோப அதிர்வுகளிலே நீ அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நின்றுவிடு.
30.என்னுடைய அறிவுதான் மிகமிக இறுதியானது. மற்ற எல்லாருடைய அறிவை விட உயர்ந்தது. ஆகவே மற்றவர்கள் சொல்வது தவறு என்று ஒரு போதும் நினைக்கவே கூடாது.
31.அன்பைச் செய்கின்றவனால் தான் அன்பு இருப்பதை உணர முடியும். உண்மையான அன்பினால் தங்களைக் கொடுக்க முடியாதவர்களினால் எங்குமே அன்பினை உணர முடியாது.
32.நாம் வேறு எந்தத் தொண்டிலும் ஈடுபட வேண்டியது இல்லை. இறைவனது தொண்டிலேயே ஈடுபட வேண்டும்.
33.குழந்தை தன் தாயை நம்புவது போல, கடவுளை முழுமையாக நம்புபவனே உண்மையான பக்தன்.