புத்தர் சிந்தனை வரிகள் – 01 | Buddha inspirational quotes in Tamil - 01
1.முட்டாள் நண்பனை விட தனியாக வாழ்வதே மேலானது.
2.போரில் ஆயிரம் பேரை வெற்றி பெறுவதை விட, மனதை வெற்றி கொள்வதே உயர்ந்த செயல்.
3.காற்று செல்லும் திசையில் மட்டுமே வாசனை பரவும். ஆனால், நல்லவர் புகழ் எல்லாத் திசையிலும் பரவும். நல்லவன் மகத்தான வெற்றி பெறுவான்.
4.உண்மை ஒன்று தான் என்றென்றும் நிலைத்திருக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.
5.உலக வாழ்வு நிஜமானதென்று நம்பும் மனிதன், எத்தகைய தவம் செய்தாலும் தூய்மை பெற இயலாது.
6.வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம் காணாமல் போய் விடும்.
7.அமைதியை விட மேலான ஆனந்தம் உலகில் வேறெதுவும் கிடையாது.
8.எதிரிக்கும் கூட நல்லதை நினைப்பவனே நல்ல மனம் படைத்தவன்.
9.தக்க சமயத்தில் உதவி செய்பவனே சிறந்த தோழன். அவனுடைய நட்பை விட்டுவிடுவது கூடாது.
10.எதைச் செய்தாலும் திருந்தச் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.