அப்பா மகள் பற்றிய தமிழ் சிந்தனை கவிதைகள் - Appa Daughter Quotes in Tamil
1. அப்பாவை அதிகம் நேசிக்கும் மகளால் இந்த உலகத்தில் பிறந்த 'நம்பிக்கை', சாகும்வரை அவர்களின் உறவிற்கு மட்டுமே விசுவாசியாக இருந்துவிட்டு செல்கிறது!
2. மகள் பிறந்ததும் புதிதாய் நடைப்பழக கற்றுக்கொள்கிறார் ஒவ்வொடு அப்பாவும்! அவள் கைகளை பிடித்தே!!
3. பெண்ணின் முகத்தை மட்டுமே பார்த்து, அவள் ஆழ் மனதை புரிந்துகொள்ள, அவள் தந்தையால் மட்டுமே முடியும்!
4. தந்தையின் தாய்மையை மகள்களால் மட்டுமே உணர முடியும்!
5. பெண் பிள்ளைகள் அதிக பாசமா இருக்குறது அப்பாவிடம் தான்! ஆனால் செயல்பாடு சிந்தனை நடவடிக்கை எல்லாம் அம்மா மாதிரியே இருக்கும்!
6. மகளின் எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வுகாணத் துடிக்கும் முதல் இதயம், அப்பா மட்டுமே!
7. தந்தையின் போராட்டங்கள் மகளின் வாழ்க்கையை வண்ணமாக்குகிறது!
8. தான் பெற்ற மகளை மட்டுமல்லை, மகளின் பெயரையும் சேர்த்து பாதுகாக்க தங்களின் பெயரை பின்னால் துணை அனுப்புகிறார், தந்தை!
9. ஆயிரம் கவலைகள் உள்ள தந்தையின் மிகப்பெரிய மகிழ்ச்சி தன் மகளின் ஒரே ஒரு சிரிப்பில் மறைந்துள்ளது!
10. அப்பாவின் அன்பை முழுமையாக பெறும் ஒவ்வொரு மகளும் கடவுளிடம் கேட்கும் வரம், அடுத்த ஜென்மத்திலும் இவருக்கே மகளாக பிறக்க வேண்டும் என்று தான்!
11. கட்டிய கணவனிடம் பெண்கள் ராணி ஆகலாம், ஆகாமலும் போகலாம். ஆனால், தன் தந்தை முன் மகள்கள் என்றும் மகாராணியே!
12. பெண்களுக்கு ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும், வாழ்நாள் முழுதும் தன் அப்பாவின் உறவைப் போன்று ஒரு உறவைப் பெறவே முடியாது!
13. என்றும் தன் இளவரசியிடம் தோற்றுப்போவதை விரும்புபவர், அப்பாதான்!
14. என் ஆளுமையை அனுசரித்து, என் கோபங்களை கொண்டாடி, என் உணர்வுகளை உண்மையாக்கி, அவர் உழைப்பில் என்னை உயரவைத்தவர், அப்பா!
15. தந்தையின் கண்களில் கண்ணர் ஆனந்தமாய் ஊற்றெடுப்பது இரண்டு இடத்தில்! ஒன்று குழந்தையாய் அவளை கையில் ஏந்தும் போது. இரண்டு அவளை வேறொரு ஆடவன் கையில் கொடுக்கும் போது!