Best Feelings Quotes in Tamil # 8
Best Feelings Quotes in Tamil # 8
1. விளக்கின் அடியில் படர்ந்து கிடக்கும் இருட்டு யாருக்கும் தெரிவதில்லை.. அதுபோல் சிரிப்பின் பின்னே சிதறிக் கிடக்கும் சோகம் யாருக்கும் புரிவதில்லை...
2. இனி எப்போதும் சந்திக்கப் போவதில்லை என்று தெரிந்து விட்ட பிரிவில் துக்கமோ வலியோ சந்தோஷமோ.. எதுவாயினும் மிக அதிகமாகவே இருக்கும்...!!!
3. அன்பு கொண்டதே தவறு என்று சிலரை நம்பி வாழ்க்கையை தொலைத்த பின்புதான் புரிகிறது...
4. அழ வைப்பது நீ என்று தெரிந்தும் அடம் பிடிக்கிறது என் கண்கள் உன்னை தான் காண வேண்டும் என்று..!
5. நாம் இல்லாவிட்டால் உண்மையில் வருத்தப்படுவது வெகு சிலர் தான்.. மற்றவர்கள் நம் இடைத்திற்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர்..!
6. உலகின் கொடிய நோய் உயிரை பிரிவது அல்ல.. உயிரானவரை பிரிவது..!
7. சில கண்ணீர்களுக்கு தான் விரல்கள் கிடைக்கின்றன... பெரும்பாலானவை தரைக்கும் தலையனைக்குமே சொந்தம்...
8. அளவுக்கு அதிகமான அன்பும் எல்லையின்றி கொண்டாடப்படும் நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக ஒருநாள் கண்ணீருக்கும் ஏமாற்றத்துக்கும் இடம் உண்டு.. !!
9. கவலைகளை எல்லோர் மத்தியிலும் கொட்டி குவித்து விட வேண்டாம்.. அதன் மீது ஏறி நின்று வேடிக்கைப்பார்ப்பார்கள்..!
10. யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பவன் தான் எல்லோராலும் கஷ்டத்தை அனுபவிக்கிறான்...