சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #03
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 03
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #03
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 03
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #03
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 03
21.எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள். நீங்கள் பலவீனர்கள் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.
22.அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையைவிட மிகப்பெரியது.
23.நீங்கள் எண்ணித் துணிந்தபின் உங்களை உலகம் முழுதும் வானெடுத்து எதிர்த்து நின்றபோதிலும் கொண்ட கருமத்தைக் கைவிடாதீர்கள்.
24.பெருமை, பட்டங்களைப் பெறுவதில் இல்லை. பட்டங்களைப் பெற தகுதியுடைவராக உருவாக்கிக் கொள்வதில்தான் இருக்கிறது.
25.பிறரிடமிருந்து நல்லதைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.
26.பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
27.உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். பின்பு உலகமே உங்கள் வசமாகும்.
28.ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தவறுகளிலிருந்தும் தாழ்வுணர்ச்சியில் இருந்தும் விடுபடுவீர்கள்.
29.வழிபாட்டை விட எப்போதும் இனியதாகவும், சிரித்த முகத்துடனும் இருந்தால் அது கடவுளுக்கு மிக அருகில் கொண்டு போய்ச் சேர்க்கும்.
30.அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடாகும்