Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 14






தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 14

 Tamil Haiku Kavithai - Part 14


Tamil Haiku Kavithai 131

Tamil Haiku Kavithai 132

Tamil Haiku Kavithai 133

Tamil Haiku Kavithai 134

Tamil Haiku Kavithai 135

Tamil Haiku Kavithai 136

Tamil Haiku Kavithai 137

Tamil Haiku Kavithai 138

Tamil Haiku Kavithai 139

Tamil Haiku Kavithai 140




 Tamil Haiku Kavithai - Part 14

131.நெகிழி:

நாளைய தலைமுறைகள்
இன்றே சபிக்கப்படுகிறார்கள்
புதைப்படும் நெகிழி !!

132.சாதனை:

நிமிர்ந்து நின்றது புல்
வளைத்துக் காட்டியது
ஒரேயொரு மழைத்துளி...!

133.வெயில்:
நிழல் தரும் மரங்கள்
எப்படித் தாங்குமோ
வெயிலை...?

134.வியர்வை:

நீரூற்றியது தோட்டக்காரன்...
வியர்த்திருக்கிறது
பூச்செடிகளுக்கு...!

135.ரியல் எஸ்டேட்:
   -------------------

நெல்லு
விளையற பூமியில
கல்லு வெளஞ்சிருக்கு...

ரியல் எஸ்டேட்...!

136.விரதம்:
   ---------

பசி நிறைந்த
கழுதை தின்றது...
உண்ணாவிரத சுவரொட்டியை...


137.சிறுமியின் கண்கள்:
   -------------------------

பறக்கும் பறவையோடு
சேர்ந்தே பயணிக்கிறது
சிறுமியின் கண்கள் !!

138.நாற்காலி:
   ------------

பறவைகள் இளைப்பாற
தெருவெங்கும் மின்கம்பிகள்
நாற்காலியாய்...!

139.சக்கரங்கள்:
   ---------------

பல முறை உரசியும்
பற்றிக்கொள்ளவேயில்லை
சாலையில் சக்கரங்கள் !!




139.கடிகாரம்:
   ------------

பலருக்கு ஓய்வு நேரம்
காட்டுகிறது
தான்
ஓய்வெடுக்காமல்.

140.ஏழ்மை:
   -------

பள்ளிக்கூடத்திற்கு
செங்கல் சுமக்கும்
சிறுமி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content