Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 16

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 16

 Tamil Haiku Kavithai - Part 16







தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 16

 Tamil Haiku Kavithai - Part 16


Tamil Haiku Kavithai 151

Tamil Haiku Kavithai 152

Tamil Haiku Kavithai 153

Tamil Haiku Kavithai 154

Tamil Haiku Kavithai 155

Tamil Haiku Kavithai 156

Tamil Haiku Kavithai 157

Tamil Haiku Kavithai 158

Tamil Haiku Kavithai 159

Tamil Haiku Kavithai 160




 Tamil Haiku Kavithai - Part 16

151.நெசவாளி:
   ----------

புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்.

152.புல்வெளி:
   ------------

பூமித் தாய்க்கு
குளிர் அடிக்கிறதோ...
போர்வை போத்துகிறது,
புல்வெளி...!

153.பொம்மை:
   ---------

பொம்மை அழுகிறது
கண்ணீரில்லை
சிறுமியின் கையில் !!

154.வறுமை:
   -------

மகிழ்ச்சியோடு மழலைகள் பள்ளிக்கு சென்றன...
சத்துணவுக்காக.

155.பூ:
   ---

மணமேடையா
பிணமேடையா
பூத்த பூ !!





156.பாடம்:
   -------

மண்ணெண்ணை விளக்கில்
ஏழை மாணவன் படித்தான்
மின் உற்பத்தி பாடம்...!

157.ஒற்றைப்பாதை:
   ----------------

மன தைரியம் அதிகம் தான்
அடர்ந்த இரவில் அடர்ந்த காட்டில்
தனியாக செல்லும் ஒற்றைப்பாதை !!

158.கடவுள்:
   ---------

மனிதனால் உருவாகி மனிதனை உருவாக்கியவன் என்ற பித்தலாட்டக்காரன்





159.கொசு:
   ------

மனிதர்களை
இரவில் தாக்கும்
போர் விமானங்கள்...

கொசு...!

160.தாஜ்மகால்:
   -------------

மனைவி இறந்தற்காக
கணவன் கட்டிய
வெள்ளை புடவை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content