Type Here to Get Search Results !

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 19

தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 19

 Tamil Haiku Kavithai - Part 19




தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 19

 Tamil Haiku Kavithai - Part 19

Tamil Haiku Kavithai 181

Tamil Haiku Kavithai 182

Tamil Haiku Kavithai 183

Tamil Haiku Kavithai 184

Tamil Haiku Kavithai 185

Tamil Haiku Kavithai 186

Tamil Haiku Kavithai 187

Tamil Haiku Kavithai 188

Tamil Haiku Kavithai 189

Tamil Haiku Kavithai 190

Tamil Haiku Kavithai 191

Tamil Haiku Kavithai 192

Tamil Haiku Kavithai 193


 Tamil Haiku Kavithai - Part 19

181.பொட்டு:
   ---------

விதவை முகம் பார்க்கிறாள்
கண்ணாடியில்
ஒட்டுப்பொட்டு...

182.தேர்தல்:
   ----------

விதவைச் சுவர்கள்
சுமங்கலியாகும்...

தேர்தல் ...!



183.சுமங்கலி:
   ------------

விதவையான தயிர் சாதம்...
சுமங்கலியாகிவிட்டது...
ஊறுகாயின் வரவால்...!

184.விதை:
   ------

விதைத்தவன் தூங்கினான்
தூங்க மறுத்த விதையின் விலையை
வேறோருவன் நிர்னையித்தான் !!

185.விநாயகர் சிலை:
   -------------------

விற்பவன் சிலையை கல்லாகவும் வாங்குபவனை கடவுளாகவும் பார்க்கிறான், வாங்குபவன் கல்லை சிலையாகவும் விற்பவனை கல்லாகவும் பார்க்கிறான்...





186.சிசு:
   ------

விளையும் பயிர்
முளையிலே
தெரிந்தது

"ஸ்கேன்".

187.முதியோர் இல்லம்:
   ----------------------

விழுதுகள் துறந்த
ஆலமரம்...

முதியோர் இல்லம் ...!






188.தற்கொலை:
   ----------

வீரமான கோழைத்தனம்...
புரியவில்லையா?
கோழையால் மட்டுமே
சாத்தியப்படும் வீரசெயல்.

189.நிழல்:
   -------

வெயிலின் சோர்வுக்கு
நிழல் தேடினார்
மரம் வெட்டி...!

190.பகைமை :
   ---------

வெளித்தோற்றமே இல்லாமல்
வளர்ந்து நிற்கிறது
பகைமை !!


191.புழுக்கம்:
   -------------

வெளியே மழை
மனதுக்குள் புழுக்கம்

ஐஸ் வியாபாரி...!


192.பசி:
   ----

வேண்டாமென வீசிய காகிதம்
வேண்டுமென எடுத்தவரின்
வயிற்றை பசியாற்றியது !!

193.மயக்கம்:
   ----------

வேர்களில் கூட
வண்ண வண்ணப் பூக்களா...?
மரத்தடியில் பெண்கள்...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content