வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #01
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 01)
வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #01
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 01)
வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #01
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 01)
1.மனத்தூய்மை, சத்தான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றைப் பின்பற்றினால் உடல்நலத்துடன் வாழலாம்.
2.பேராசை, கோபம், கவலை, பொறாமை எண்ணங்களுக்கு இடம் அளிக்காமல் மனதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
3.இயற்கையுடன் ஒத்துப்போனால் உடல்நலம் பாதித்தாலும், அதை தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும் தன்மை உடலுக்கு கிடைத்து விடும்.
4.எல்லாரையும் வாழ்க வளமுடன் என்று சொல்லுங்கள்.
5.ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். உயர்வு பெறுவீர்கள்.
6.மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.
7.இன்றைய உலகில் பணத்திற்கும், பண்புக்கும் போட்டி நிலவுகிறது. இதில் பண்பு தான் தோற்றுப் போய் நிற்கிறது.
8.உள்ளத்தில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகிவிட்டால் பகையுணர்வு நீங்கும்.
9.நீ யார் என்று அறிய ஆர்வம் எழுந்து விட்டால், அது உன்னை அறியும் வரையில் அமைதி பெறுவதில்லை.
10.விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை ஒழித்தால் அதுவே மேன்மைக்கு வழி வகுக்கும்.
11.எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதனுக்கு கோபம் வராவிட்டால் அவன் ஞானம் அடைந்ததாகப் பொருள்.