புத்தர் சிந்தனை வரிகள் – 02 | Buddha inspirational quotes in Tamil - 02
11.வாழ்வில் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அது இயல்பானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
12.எரியும் நெருப்பில் கவனம் வைப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.
13.நிகழ்காலமான இந்த கணத்தில் வாழுங்கள். வாழ்வின் இனிமையை அனுபவித்து மகிழுங்கள்.
14.வாழ்வு என்பது கணநேரத்தில் முடிவது அல்ல. ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்வதாகும்.
15.சோம்பல் கொண்டவனும், அளவுக்கு மீறி உழைப்பவனும் உண்மையான ஆன்மிக வாழ்வு வாழ முடியாது.
16.குடும்பத்திற்கு மட்டுமின்றி, வாழும் சமூகத்திற்கும் மனிதன் பயனுடையவனாக இருக்க வேண்டும்.
17.உலகத்தை வெல்வதைக் காட்டிலும் சுயநலத்தை வெல்வதே மகத்தான வெற்றி.
18.தனக்குத் தானே மனிதன் அடிமைப்பட்டுள்ளான். அதிலிருந்து விடுபட போராட வேண்டியிருக்கிறது.
19.உண்மையை யாராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது. அதை மறைக்கும் வலிமை யாருக்குமில்லை.
20.உண்மை இனிமையானது. அதன் அருமையை உணராதவர்களுக்கு இனிமை புலப்படுவதில்லை.