புத்தர் சிந்தனை வரிகள் – 03 | Buddha inspirational quotes in Tamil - 03
21.வாழ்வு அன்பும், உண்மையும் நிரம்பியதாக இருந்தால், எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
22.உணர்வோடு இருப்பதைப் போலவே, அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
23.தர்மத்தை உங்கள் புகழிடமாய் ஏற்றுக் கொள்ளுங்கள். அது மனிதனைப் பாதுகாக்க வல்லது.
24.செல்வம் ஓரிடத்தில் நிலைத்து நிற்பது இல்லை. வளர்வதும், தேய்வதும் அதன் இயல்பு.
25.நாம் செய்த செயல்களின் விளைவு, நிழல் போல எப்போதும் உடன் வந்து கொண்டிருக்கும்.
26.மனதில் நினைப்பதையே சொல்லுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருந்து விடுங்கள்.
27.பயனில்லாத சொற்கள் மணம் இல்லாத மலர்களுக்குச் சமமானவை.
28.கேள்விப்படும் அத்தனை விஷயங்களையும் உண்மை என்று நம்புவது கூடாது.
29.அஞ்சுவதற்கு அஞ்சாமல் இருப்பதும், வேண்டாததற்கு அஞ்சுவதும் தீமை தரும்.
30.அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகி விட முடியாது.