புத்தர் சிந்தனை வரிகள் – 04 | Buddha inspirational quotes in Tamil - 04
31.அன்பு வாழ்வே சிறந்த வாழ்வு. அன்பிருக்கும் இடம் தேடி அமைதி தானாகவே வந்து விடும்.
32.எந்த விஷயத்தையும் யார் கூறுகிறார் என்பதை விட, என்ன கூறுகிறார் என்பதே முக்கியமானது.
33.தூய எண்ணத்துடன் பேசும்போதும், செயல்படும்போதும் மகிழ்ச்சி நிழல் போல நம்மைத் தொடர்கிறது.
34.நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல உண்மை எப்போதும் அமைதியுடன் இருக்கும்.
35.சிந்தையில் கலக்கம் இல்லாத மனிதனிடம் அச்சம் சிறிதும் இருப்பது இல்லை.
36.காதில் கேட்டதற்காகவே, ஒரு விஷயத்தை உறுதியென நம்பத் தேவையில்லை.
37.புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது.
38.வெளிப்புறத்தைக் கழுவியது போதும். உட்புறமான உள்ளத்தைக் கழுவுவதே தேவையானது.
39.அக்கறையின்றிச் செய்யும் எந்தச் செயலாலும் பலனேதும் உண்டாகாது.
40.போதனை செய்யும் முன், முதலில் தன்னை பண்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்.