புத்தர் சிந்தனை வரிகள் – 05 | Buddha inspirational quotes in Tamil - 05
41.நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். திருப்தியான மனம் படைத்தவரே செல்வந்தர்.
42.அறிவும், ஒழுக்கமும் நிறைந்த நல்லோர் நட்பைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
43.முட்டாளிடம் நட்பு கொள்வதை விட ஒருவன் தனித்து இருப்பதே சிறப்பானது.
44.விடுதலைக்குரிய வழியை அடைய பிறரை எதிர்பார்க்காதீர்கள். அது உங்களிடமே உள்ளது.
45.சுயலாபத்திற்காக பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள் வெறுப்பு என்னும் வலையில் சிக்கித் தவிப்பர்.
46.வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அமைதியுடன் செயலாற்றிக் கொண்டிருங்கள்.
47.நூறு ஆண்டுகள் ஒழுங்கீனமாக வாழ்வதை விட, ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வது சிறந்தது.
48.மனத்தூய்மையுடன் வாழ்பவன் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
49.கடினமான பாறை புயலைக் கண்டு கலங்காதது போல புகழ், இகழ் ஆகிய இரண்டையும் கண்டு அறிஞர்களின் மனம் கலங்குவதில்லை.
50.பகையைப் பகையால் தணிக்க முடிவதில்லை. அன்பால் மட்டுமே பகை தீரும்.