புத்தர் சிந்தனை வரிகள் – 06 | Buddha inspirational quotes in Tamil - 06
51.பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிர்வது போல மனிதர்களும் ஒருநாள் இறக்க வேண்டியவர்களே.
52.சத்தியத்தை ஒளியாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியமே வெற்றி தரும்.
53.நீங்கள் யாரிடமும் அடைக்கலமாகாதீர்கள். நீங்களே உங்களுக்கு அடைக்கலமாக இருங்கள்.
54.தீமையைத் தவிர்த்து நன்மை செய்யப் பழகுங்கள். இதனால் மனம் தூய்மை பெறும்.
55.உன் வாழ்க்கை உன் குடும்பத்துக்கு மட்டுமின்றி, நீ வாழும் சமூகத்திற்கும், உலகத்திற்கும் பயன் அளிப்பதாக இருக்கட்டும்.
56.வாழ்வு என்பது ஒரு கணம் அன்று. ஒவ்வொரு கணமாய் வாழ வேண்டும்.
ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழ முயல வேண்டும்.
57.மலர்களின் அழகில் ஈடுபடுங்கள். பறவைகளின் இனிய ஒலிக்கு காது கொடுங்கள். சூரியனின் அழகை கண்டு மகிழுங்கள். இயற்கையை நேசியுங்கள்.
58.யாரையும் துன்புறுத்தக் கூடாது. பிறருக்கு உங்களால் இயன்ற நன்மைகளைச் செய்யுங்கள்.
59.நன்கு வேயப்பட்ட கூரைவீட்டில் மழைநீர் இறங்காது. அதுபோல நன்னெறியை பின்பற்றும் மனதில் தீய ஆசைகள் புகுவதில்லை.
60.நாம் செய்த நன்மையும், தீமையும் நிழல் போல நம்மைத் தொடர்ந்து வருகின்றன.