புத்தர் சிந்தனை வரிகள் – 07 | Buddha inspirational quotes in Tamil - 07
61.நல்லோரின் புகழ், காற்றில் நறுமணம் பரவுவது போல, நாலாபுறத்திலும் பரவி நிற்கும்.
62.செல்வம் உள்ள காலத்திலேயே தர்மம் செய்து விடுங்கள். இல்லாவிட்டால் அது நம்மை விட்டு விலகிச் சென்று விடும்.
63.மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது. உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது.
64.ஆயிரம் வீண்வார்த்தைகளை விட, கேட்பவர்களுக்கு இதம் தரும் ஒரு நல்ல வார்த்தை மேலானது.
65.கேள்விப்பட்டதை எல்லாம் கண் மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். அதிலிருக்கும் உண்மையை அறிய முற்படுங்கள்.
66.உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும்.
67.அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வதே மேலானது.
68.நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.
69.தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
70.அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.