காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 06 | Kanji Periyavar inspirational quotes in Tamil -06
51.கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவிலில் காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டானது.
52.பேச்சு, பணம், செயல் எல்லாவற்றிலும் கணக்காக இருக்க வேண்டும். ஆசைக்காக அளவுக்கு மீறி எதிலும் ஈடுபடுவது கூடாது.
53.எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.
54.ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.
55.ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்கு பிறவிச் சங்கிலி தொடர்கிறது.
56.பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.
57.போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. பணத்தாசையால் தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதுகின்றனர்.
58.குடும்பத்தில் பெரியவர்கள் தியானம் செய்வதோடு குழந்தைகளையும் தியானம் செய்ய வற்புறுத்த வேண்டும்.
59.உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.
60.பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.