காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 12 | Kanji Periyavar inspirational quotes in Tamil -12
111.நல்ல செயல்களைத் தர்மம் என குறிப்பிட்டாலும், பிறருக்கு கொடுத்து உதவுவதையே தர்மம் என சிறப்பாகச் சொல்கிறோம்.
112.பொது சேவையில் ஈடுபடுபவர்கள் குடும்ப கடமையை மறக்கக் கூடாது.
113.வாக்கும், மனமும் ஒன்றுபட்டு செய்யப்படும் செயல், நல்ல விளைவுகளை உண்டாக்குவதாக இருக்கும்.
114.தேவையற்ற ஆசைகளை வளர்த்தால் மன அமைதி குறையும். போதுமென்ற மனம் நிம்மதிக்கு வழிவகுக்கும்.
115.பண விஷயத்தில் மட்டும் கணக்காக இருந்தால் போதாது. பேசுவதிலும் கணக்காக இருப்பது நல்லது.
116.நேர்மை, கருணை, அடக்கம், உழைப்பு, கடவுள் பக்தி போன்ற நற்குணங்களுடன் வாழ்வதே உயர்ந்தது.
117.எடுத்துச் சொல்வது யாருக்கும் எளிதான செயல். ஆனால், எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதே சிறந்தது.
118.பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன நல்லதைச் செய்ய வேண்டும்.
119.கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம் நம் நிலையைச் சொல்வதை விட, கடவுளிடம் கஷ்டத்தைச் சொல்வது மேலானது.
120.வாழ்வில் நன்மை உண்டாகும் போது, மறவாமல் கடவுளுக்கு நன்றி சொல்ல பழக வேண்டும்.