புத்தர் சிந்தனை வரிகள் – 08 | Buddha inspirational quotes in Tamil - 08
71.அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டும். அஞ்ச வேண்டாததற்கு அஞ்சக்கூடாது. இந்த கொள்கையை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பாதையில் திரும்பிவிட்டீர்கள் என்று பொருள்.
72.அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.
73.வாழ்வில் நேரும் எந்த துன்பத்திற்கும் யார் காரணமாக இருந்தாலும் அவரைத் தவறாக எண்ணாதீர்கள். எப்போதும் நேர்வழியில் நடக்க முயலுங்கள்.
74.செருக்கை விடுத்து பணிவுடன் செயல்படுங்கள். கோபத்தை விடுத்து அமைதியாக இருங்கள். கடுஞ்சொல்லை மறந்து இனிமையாகப் பேசுங்கள்.
75.தீய செயல்களைச் செய்வது எளிமையானது. நற்செயல்களைச் செய்வது கடினமானது. ஆனாலும், நம்பிக்கையுடன் நல்லதை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
76.இருதரப்பு வாதத்தையும் பொறுமையுடன் கேட்ட பின், மனதில் எடை போட்டுப் பாருங்கள். முடிவில் நியாயத்தின் பக்கம் தீர்ப்பளியுங்கள்.
77.செல்வம், புகழ், பதவி என எவ்வளவு மேன்மை பெற்றிருந்தாலும் பகுத்தறிவு இல்லாவிட்டால் மனிதன் அழிந்து போவான்.
78.பயனில்லாத சொற்களைப் பேசுபவன், வாசனை இல்லாத மலருக்கு சமமானவன். மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் மவுனமாக இருப்பதே மேல்.
79.பிறரிடம் தீய சொல் பேசுவது உனக்கு இன்பமாக இருந்தால், அவர்கள் திருப்பி தாக்குவதையும் இன்பமாகவே கொள்ள வேண்டும்.
80.மூடனைப் பிறர் அழிக்க வேண்டியது இல்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்வான்.