புத்தர் சிந்தனை வரிகள் – 09 | Buddha inspirational quotes in Tamil - 09
81.உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள். இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.
82.எதிர்ப்பும்,தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான். காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.
83.போரில் ஆயிரம் பேரை அழித்து வெல்பவனை விட தன்னைத்தானே அடக்கி வென்றவனே உயர்தரமான வெற்றியாளன்.
84.புதிதாய் கறந்த பசும்பாலைப் போல பாவச் செயல்கள் உடனேயே புளிப்பாக மாறிவிடுவதில்லை. நீறுபூத்த நெருப்பைப் போல உள்ளூரக் கனன்று கொண்டேயிருந்து மனிதனைப் பற்றுகிறது.
85.கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், பொய்யினை உண்மையால் வெல்ல வேண்டும்.
86.வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும் துன்புறுத்தாதீர்கள்.
87.வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
88.வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின் இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.
89.கடலில் வந்து கலக்கும் ஆறுகள் தங்கள் தனிப்பட்ட தன்மையை இழந்து, மகாசமுத்திரம் என்ற பெயரில் வழங்கப்படுவது போல், எல்லா ஜாதியினரும் தங்கள் வம்சாவளியை துறந்து ஒற்றுமையாய் இருந்தால் சகோதரர் ஆகிவிடுவார்கள்.
90.அனைவரையும் நேசியுங்கள். எப்போதும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் வாழ்க்கையில் சந்தோஷத்தை பெறுவீர்கள்.