புத்தர் சிந்தனை வரிகள் – 10 | Buddha inspirational quotes in Tamil - 10
91.அடக்கம் இல்லாமல் ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்ந்தவனுடைய வாழ்வு சிறப்பு உடையதாகும்.
92.வாழ்க்கைக் கடலுக்கு நடுவே தீவைப் போல நீ அரண் செய்து கொள். ஊக்கமும்,அறிவும் உடையவனாய் இரு.
93.மாசுக்கள் அகன்று நீ தூயவனாகி விட்டால் ஒளிமிக்க மேலோர் வாழும் உலகை நீ அடையலாம். அதன்பிறகு, உனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.
94.வாழ்வின் முடிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதைக்கண்டு மிரளத் தேவையில்லை.
95.நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.
96.போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவனே சிறந்த வீரன்.
97.வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி.
98.அறிஞனோடு வாழ்ந்தாலும், முட்டாளால் அறிவைப் பெற முடியாது. குழம்பின் ருசியை ஒருபோதும் கரண்டியால் அறிய முடிவதில்லை.
99.உண்மையைப் பேசுங்கள். கோபத்தை தவிர்க்க முயலுங்கள். கையில் இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
100.நரை, திரை தோன்றினால் மட்டும் ஒருவர் பெரியவர் ஆக முடியாது. அறிவால் முதிர்ந்திருப்பவரே உண்மையில் பெரியவர்.