புத்தர் சிந்தனை வரிகள் – 11 | Buddha inspirational quotes in Tamil - 11
101.பிரார்த்தனைகளுக்குள் மிகவும் உயர்ந்தது பொறுமையே. அதுவே மேலான தவம்.
102.பிறருக்குத் தீங்கு நினைப்பவனைத் துறவி என்று சொல்ல முடியாது.
103.மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கு அல்ல.
104.அறிவுள்ள எதிரியை விட அறிவில்லாத நண்பர்களின் நட்பு ஆபத்தை விளைவிக்கும்.
105.பகையை பகையால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாகத் தான் பகையுணர்வு நீங்கும்.
106.பேராசை கொண்ட மனிதனின் மனதில் பயமும், வேதனையும் எப்போதும் குடிகொண்டிருக்கும்.
107.உலக வாழ்வின் நோக்கம் பிறருக்கு உதவி புரிவதே ஆகும்.
108.எண்ணத்தால் கூட பிறருக்குத் தீங்கு நினைப்பது கூடாது. எப்போதும் மற்றவர்க்கு நன்மை அளிக்கும் விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.
109.அனைவரின் உடலிலும் ஒரே ரத்தம் தான் ஓடுகிறது. பிறப்பால் யாரிடமும் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது.
110.நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.