புத்தர் சிந்தனை வரிகள் – 12 | Buddha inspirational quotes in Tamil - 12
111.கூரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டில் மழைநீர் இறங்குவதில்லை. அதுபோல, நன்கு நெறிப்படுத்தப்பட்ட மனதில் வீணான ஆசைகள் புகுவதில்லை.
112.நல்ல எண்ணங்களால் தன் உள்ளத்தை தூய்மையாக்கிய நிலையில் மனமானது, ஆழமான, அமைதியான ஏரியைப் போல் தூய்மையும், நிம்மதியும் பெற்றுவிடும்.
113.தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.
114.அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.
115.அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.
116.மகிழ்ச்சியை வெளிப்படுத்த பல்லைக் காட்டி சிரிக்க வேண்டாம். புன்னகை ஒன்றே போதுமானது.
117.ஒழுக்கம் உள்ளவர்களோடு உறவாடுங்கள். அறிவாளிகளின் சகவாசத்தைத் தேடிப் பெறுங்கள்.
118.இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. இரண்டையுமே திறந்த மனதுடன் பாராட்டுங்கள்.
119.தன் குறையை அறியத் தொடங்கி விட்டால், மற்றவர்களைப் பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது.
120.யாரையும் விரோதியாக கருதாதீர்கள். ஏனென்றால் பகையுணர்வால் தீமை மட்டுமே விளைகிறது.