புத்தர் சிந்தனை வரிகள் – 13 | Buddha inspirational quotes in Tamil - 13
121.உணர்வுடன் இருங்கள். அதே சமயத்தில் உணர்வில் இருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
122.தனக்குத் தானே அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதன், தனக்குத் தானே போராடித்தான் சுதந்திரம் பெற முடியும்.
123.எதைச் செய்தாலும் தரமாகச் செய்யுங்கள். அது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
124.குடும்பத்திற்காக மட்டும் இல்லாமல், சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் பயனளிப்பதாக வாழ்வு இருக்க வேண்டும்.
125.இயற்கையின் அழகில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு கணப்பொழுதையும் பயனுள்ளதாக்குங்கள்.
126.நெருப்பில் கவனமாக இருப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.
127.இரக்க சிந்தனையை யாரும் சொல்லித் தர முடியாது. அது இயல்பாய் மனதில் அமைந்திருக்க வேண்டும்.
128.சுயபரிசோதனை மூலம் நம்மிடம் உள்ள தீய குணங்களை அகற்ற முடியும்.
129.உழைப்பின் மூலம் முன்னேறுங்கள். தூய்மையும், நேர்மையும் உங்களின் இரு கைகளாக இருக்கட்டும்.
130.காலம் காலமாக சொல்லப்பட்டு வந்ததற்காக ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.