புத்தர் சிந்தனை வரிகள் – 14 | Buddha inspirational quotes in Tamil - 14
131.பிறருக்கு நன்மையும், ஆறுதலும் அளிக்கின்ற செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.
132.மனதை உள்நோக்கித் திருப்புங்கள். உங்களின் குறைகள் உங்களுக்குத் தெரிய வரும்.
133.அறிவின் துணை கொண்டு உண்மையை அறிய முயற்சிக்க வேண்டும். வீண் ஆராய்ச்சியில் காலத்தை விரயமாக்க கூடாது.
134.நல்லது செய்ய காலம் தாழ்த்தாதீர்கள். இல்லாவிட்டால், மனம் தீமைக்குள் நுழைந்து விடும்.
135.தவறை மீண்டும் அனுமதிப்பது கூடாது. அதைத் திருத்திக் கொள்வதே நல்லது.
136.மனதில் அமைதி இருந்தால் மட்டுமே சொல்லும் சொல்லிலும் அமைதி இருக்கும்.
137.நண்பர்களைத் தனக்குச் சமமாக நடத்துபவனே நல்ல மனிதன்.
138.பஞ்சில் படிந்த நெருப்பு போல மனதில் எழுந்த வெறுப்பு வேகமாகப் பரவி விடும்.
139.புயலுக்கு அசையாத உறுதியான பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சியைக் கண்டு மயங்காதவனே அறிஞன்.
140.பகைமைக்கு நிகரான பாவம் இல்லை. மன அமைதிக்கு ஈடான இன்பம் இல்லை.