சந்தேகம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Doubt quotes in Tamil
1.எவன் சந்தேகத்தையும், அச்சத்தையும் வெற்றி கொண்டானோ அவனே தோல்வியையும் வெற்றி கொண்டவனாவான்.
-ஜேம்ஸ் ஆலன்
2.சந்தேக எண்ணங்கள் வெளவால் போன்றவை. அவை மங்கலான வெளிச்சத்தில்தான் பறக்கின்றன.
-பிரான்சிஸ் பேக்கன்
3.ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.
-லியோ டால்ஸ்டாய்
4.சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை.
-காண்டேகர்
5.சந்தேகம் எனும் புண்ணை விவாதங்களினாலும், விளக்கங்களினாலும் குணப்படுத்த முடியாது.
-மகாத்மா காந்தியடிகள்
6.சந்தேகத்தை வெற்றி கொள்ளுங்கள், தோல்வியைத் தவிர்த்திடலாம்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
7.சலிப்பு வருகிற நேரத்தில் வள்ளுவரின் உருவத்தை ஒரு முறை பார்த்தால், வந்த சலிப்பு பறந்துபோகும். சந்தேகம் வரும்போது திருக்குறளில் காணப்படும் கருத்துக்களை எண்ணிப்பார்த்தால் வந்த ஐயப்பாடுகள் நீங்கிவிடும்.
-அறிஞர் அண்ணா
8.சந்தேகம், கோழையின் குணம்.
-ஜார்ஜ் ஹெர்பெர்ட்