எந்த நேரமும் | ஊக்குவிப்பு | Motivating force quotes in Tamil - 07
61.ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
-சுவாமி விவேகானந்தர்
62.நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்கு அஞ்சுவதில் அர்த்தமில்லை.
-கண்ணதாசன்
63.எந்த நேரமும் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் செயல்படுகிறவனுக்குத்தான் இந்த உலகம் சொந்தம்.
-எமேர்சன்
64.நீ நடந்துபோக பாதை இல்லையென்று கவலைபடாதே. நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
-அடால்ஃப் ஹிட்லர்
65.துவண்டு விடாதீர்கள். முதல் தடவை உங்களை ஒதுக்கலாம். இரண்டாம் தடவை நீங்கள் ஒளி வீசப் போவது உறுதி. எனவே தொடர்ந்து செல்லுங்கள்.
-வால்டேர்
66.விழுதல் என்பது வேதனை! விழுந்த இடத்தில, மீண்டும் எழுதல் என்பது சாதனை!
-கௌதம புத்தர்
67.வாழ முடிவுசெய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து செயலாற்றல் கொண்டவர்களாக வாழலாம்.
-இங்கர்சால்
68.பத்தாவது முறையாகக் கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி முத்தமிட்டு சொன்னது நீ ஓன்பது முறை எழுந்தவன் என்று
-கன்பூசியஸ்
69.இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்
-பெஞ்சமின் பிராங்க்ளின்
70.நீங்கள் எதிலும் முதலில் வரவேண்டுமா? முதலில் விழித்தெழுங்கள்.
-இங்கர்சால்
71.நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.
-கி.வீரமணி
72.என்னால் இயலாதென்று ஒருநாளும் நினையாதே!
-சுவாமி விவேகானந்தர்
73.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருகின்றன.
-சுவாமி விவேகானந்தர்
74.எவ்வளவுதூரம் நான் கடந்து வந்திருக்கிறேன் என்பதைவிட, இன்னும் எவ்வளவு தூரத்தை நான் கடக்க வேண்டியிருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதுதான் என்னுடைய ஊக்க சக்தியின் அச்சாணி
-அப்துல் கலாம்