Type Here to Get Search Results !

ஜேம்ஸ் ஆலன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | James Allen Motivational Quotes in Tamil


ஜேம்ஸ் ஆலன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

James Allen Motivational Quotes in Tamil 

 

1.எவன் சந்தேகத்தையும், அச்சத்தையும் வெற்றி கொண்டானோ அவனே தோல்வியையும் வெற்றி கொண்டவனாவான்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

 

2.மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படு; அதைரியமூட்டுபவர்களை அருகில் விடாதே.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

3.காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை நீயே கொலை செய்வதற்கு ஒப்பாகும்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

4.அலட்சியம் இல்லாமல் இதயத்தை சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தால் போதும் அனைத்தும் நல்லவையாக அமையும்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

5.உன்னதமான வாழ்விற்காக எல்லோருமே ஏங்குகிறோம்; ஆனால், அதற்கு அடிப்படையான உன்னதமான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குகிறோம்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

6.ஒழுக்கம் உள்ள மனிதன் பெருந்தன்மையும் மரியாதையும் கலந்த சொற்களையே பேசுவான்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

7.மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளித்தல், மற்றவர்களின் கஷ்டங்களைப் போக்குதல் இவையே நமது கடமைகள். இரக்கம் என்ற அரிய குணம் இருந்தால் கடைசி வரை இந்த இரண்டு பணிகளையும் சிறப்பாகச் செய்ய முடியும்.

 

-ஜேம்ஸ் ஆலன்

8.உன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் நிறைந்ததாகவும், இன்பம் பயப்பதாகவும் இருக்கட்டும். எக்காலத்திலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதுவாயாக.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

9.மனநேர்மை உடல் ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவது போல ஒருவன் விரும்பும் செயலையும் அது நேர்வழியில் செய்து முடித்துவிடுமாறும் செய்கிறது.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

10.பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகா.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

11.எவன் மற்றவர்களின் வேலைகளின் வீணாகத் தலையிடாமல் தன்னுடைய வாழ்வின் கடமைகளை அறிவுடனும் அக்கறையுடனும் கவனிக்கிறானோ, அவனுக்கு வெற்றி, கௌரவும், செல்வாக்கு ஆகிய மூன்றும் வந்து சேரும்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

12.உண்மையுடன் வாழ்வதே இறைவனை வணங்குவதற்கு ஒப்பானது என்பதைப் புரிந்து கொண்டவரின் வெற்றிகள் நிலைத்து நின்று ஒளி வீசுகின்றன.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

13.முயற்சி செய்கிறவரை நம் திறமையே தெரியாது

 

-ஜேம்ஸ் ஆலன்

14.மற்றவர்கள் செயலால் மகிழ்ச்சி அடையாத மனிதனால், நல்ல செயல்கள் எதையும்  செய்யமுடியாது.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

15.செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

16.ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்துவிரல்கள்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

17.உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.

 

-ஜேம்ஸ் ஆலன்

 

18.எவன் மற்றவர்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.

 

-ஜேம்ஸ் ஆலன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content