Type Here to Get Search Results !

சாமுவேல் ஜான்சன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Samuel Johnson Motivational Quotes in Tamil

சாமுவேல் ஜான்சன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Samuel Johnson Motivational Quotes in Tamil


சாமுவேல் ஜான்சன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Samuel Johnson Motivational Quotes in Tamil 

 

1.ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான். வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

2.கஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வது, அதனை அனுபவித்து விடுவதுதான்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

3.நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலை அளிக்கும்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

4.பெரும் பொறுப்புகளை ஏற்க முதன்மையாகத் தேவைப்படுவது தன்னம்பிக்கை.

 

-சாமுவேல் ஜான்சன்

 

5.மகத்தான சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையால் அல்ல, விடா முயற்சியினால்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

6.விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமுடையவன் அறிவாளியாகிறான்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

 

 

7.வெற்றிக்கு திட்டமிடாதவர்கள் தானாகவே தோல்விக்கு திட்டம்போட்டு விடுகிறார்கள்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

8.சமயம் வரட்டும் பல நற்செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம் என்று காத்திருப்பவன் எந்த சமயத்திலும் எதுவும் செய்யமாட்டான்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

9.ஒரு புத்தகத்தை எழுத நீங்கள் பாதி நூலகத்தைப் படிக்க வேண்டும்

 

-சாமுவேல் ஜான்சன்

 

10.திருமணத்தில் பல சங்கடங்கள் உண்டு. பிரம்மச்சரியத்தால் எந்த சந்தோசமும் கிடையாது.

 

-சாமுவேல் ஜான்சன்

 

11.ஆற்றல் நிறைந்தவனாக இருப்பதைக் காட்டிலும் நேர்மையானவனாக இருப்பது மேலானது.

 

-சாமுவேல் ஜான்சன்

 

12.திட்டமிடுவதற்கு கடினமானதாக இருக்கும் பல விஷயங்கள், செயல்படுத்துவதற்கு எளிதானதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

 

-சாமுவேல் ஜான்சன்

 

 

13.வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே, அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு

 

-சாமுவேல் ஜான்சன்

 

14.மனிதன் மட்டுமே அழுகையுடன் பிறந்து, புகாருடன் வாழ்ந்து, ஏமாற்றத்துடன் இறக்கின்றான்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

15.சூரிய ஒளியின் பிரகாசத்தை அனுபவிக்க வேண்டுமானால், கண்டிப்பாக நிழலின் குளுமையை விட்டுவிட வேண்டும்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

16.சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது. சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது

 

-சாமுவேல் ஜான்சன்

 

17.பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான் மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.

 

-சாமுவேல் ஜான்சன்

18.மற்ற எல்லா பண்புகளையும் விட சிறந்தது தைரியமே; ஏனெனில் உங்களிடம் தைரியம் இல்லாதபோது, மற்ற பண்புகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது.

 

-சாமுவேல் ஜான்சன்

 

19.எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் மூலம் வாங்கப்படுகின்றது.

 

-சாமுவேல் ஜான்சன்

 

20.நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின் மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை.

 

-சாமுவேல் ஜான்சன்

 

21.நீ தனிமையாய் இருக்கும் போது வேலையின்றிச் சும்மா இருக்காதே!

 

நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!

 

-சாமுவேல் ஜான்சன்

 

22.வளத்தின் ஒரு கை உழைப்பு. ஒரு கை சிக்கனம்.

 

-சாமுவேல் ஜான்சன்

 

23.போர் மனிதர்களை அழிக்கிறது, அதுபோல் ஆடம்பரம் மனிதாபிமானத்தையும், உடலையும், உள்ளத்தையும் அழிக்கிறது.

 

-சாமுவேல் ஜான்சன்

 

24.திருமணம் என்பது ஆண், பெண் நட்பு. நம்பிக்கையில்லாமல் நட்பு வளராது. நம்பிக்கையோ நேர்மையில் இருந்து மலர்வது.

 

-சாமுவேல் ஜான்சன்

25.அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.

 

-சாமுவேல் ஜான்சன்

 

26.நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள். எதிர்காலம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும்.

 

-சாமுவேல் ஜான்சன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content