Type Here to Get Search Results !

சிந்தனை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Thought quotes in Tamil




சிந்தனை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்  | Thought quotes in  Tamil


1.உயர்ந்த சிந்தனைகளின் வழியாகவும் சளையாத உழைப்பினாலும், பயனற்றுப் போகும் வாழ்க்கையை, அழியாத ஒரு இலட்சியத்திற்கு தாய் நாட்டின் விடுதலைக்காக ஈடுபட செய்ய வேண்டும். அதுவே நம் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.

-நேதாஜி



2.தனி மனிதனின் தனி உரிமையான சிந்தனையால் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.


-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


3.சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.



-நெப்போலியன் பொனபார்ட்


4.புதிய யோசனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிரமத்தை விட பழைய யோசனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம்.



-ஜான் மேனார்ட் கீன்ஸ்



5.தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.



-கௌதம புத்தர்


6.உயிரினங்களில் மனிதனே சிறந்தவன், அவனது சிந்தனைத் திறன்தான் அந்த 'சிறப்பினை' அவனுக்கு அளிக்கின்றது.



-அரிஸ்டாடில்


7.சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.



-தந்தை பெரியார்


8.சிந்தனை சந்தேகத்தை வளர்க்கிறது. சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கிறது. ஆராய்ச்சி உண்மையை வளர்க்கிறது. உண்மை எல்லா மூட நம்பிக்கைகளையும் அழிக்கிறது.



-இங்கர்சால்



9.ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் ஒரு விஷயத்தை ஒரே ஒரு முறை சிந்திப்பதன் மூலம் நமக்கு சரியான யோசனை கிடைக்காது.



-ஹென்றி டேவிட் தொரேயு



10.சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.



-அப்துல் கலாம்


11.ஆழ்ந்து சிந்தித்தபின் முடிவெடுப்பவனே வெற்றிகரமான மனிதனாக விளங்கமுடியும்



-கார்ல் மார்க்ஸ்


12.படிப்பு, படிப்பு என்று பலரும் படித்துக் கொண்டே இருக்கிறார்கள் சிலர் நமது சிந்தனை சக்தியை இழப்பது வரை படிக்கிறார்கள். படிப்பதை நிறுத்திவிட்டு முதலில் படித்ததைப் பற்றி சிந்தியுங்கள்.



-மகாத்மா காந்தியடிகள்


13.சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.



-தந்தை பெரியார்



14.சுயமாக சிந்தனை செய்யாத மனிதன் அடிமை, அவன் தனக்கு மட்டும் துரோகியல்ல மற்றவர்களுக்கும் துரோகியாகின்றன.



-இங்கர்சால்


15.மற்றொரு சிந்தனையை தேர்வு செய்துகொள்வதற்கான நமது திறனே, மன அழுத்தத்திற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம்.



-வில்லியம் ஜேம்ஸ்



16.சிந்திப்பதும், தனது சிந்தனையில் தோன்றியதைச் சொல்வதும் தனிமனிதனின் பிறப்புரிமை, அதனைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ எவருக்கும் உரிமையில்லை. மனிதன் தடையின்றிச் சிந்திக்கிற நாட்டில்தான் உண்மையான மக்களாட்சி மலரும்.



-சாக்ரட்டீஸ்



17.சிந்திப்பது என்பது மிகவும் கடினமான வேலை. அதனாலேயேதான், மிகச்சிலரே அந்த வேலையைச் செய்கின்றனர்.



-ஹென்றி ஃபோர்டு



18.சிந்தனை எளிதானது, செயல்பாடு கடினமானது; ஒருவரது எண்ணத்தை செயல்பாடாக மாற்றுவது உலகிலேயே மிக கடினமான விஷயம்.



-கதே



19.நான் சமுதாயத்திற்கு என்ன நன்மையைச் செய்திருந்தாலும் அது என் சிந்தனையையே சாரும்.



-ஐசக் நியூட்டன்



20.மறுசிந்தனையே சிறந்த சிந்தனை.



-எமேர்சன்



21.கீழ்த்தரமான சிந்தனைகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம்.



-கன்பூசியஸ்



22.ஒருவருக்கு தீவிரமாக சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதே கல்வியின் செயல்பாடு.



-மார்டின் லூதர் கிங்



23.படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது, எந்தப் பிரச்சனையோடாவது உராயும்போதுதான் அதிலிருந்து சிந்தனை சுடர் ஏற்படுகிறது



-சுவாமி விவேகானந்தர்



24.செயலில்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது, எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.



-ஜவகர்லால் நேரு


25.ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய சிந்தனைதான்.



-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ


26.நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.



-சார்லி சாப்ளின்


27.செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.



-சுவாமி விவேகானந்தர்


28.ஒரு மணி நேர பேச்சை விட ஒரு நிமிட சிந்தனை மேலானது.



-ஜான் சி மேக்ஸ்வெல்


29.மனிதனாகப் பிறந்தவன் கட்டாயமாகச் சிந்திக்க வேண்டும். சிந்திக்கச் சிந்திக்க மனிதனின் எண்ணங்கள் உருப்பெற்றுச் சிறப்படையும் சிந்திப்பது மனிதனுடைய தனி உரிமை சிந்திக்கத் தெரிந்தவனே மனிதன் அறிவாளி.



-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


30.கடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனைத் தரும்.



-கிருபானந்த வாரியார்


31.நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களுக்குத் தேவைபடுவதெல்லாம் ஓர் அபாரமான யோசனை மட்டுமே.

  

சிந்தனை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்  | Thought quotes in  Tamil

ProvidentquotesinTamil1

ProvidentquotesinTamil2

ProvidentquotesinTamil3

ProvidentquotesinTamil4

ProvidentquotesinTamil5

ProvidentquotesinTamil6

ProvidentquotesinTamil7

ProvidentquotesinTamil8

ProvidentquotesinTamil9

ProvidentquotesinTamil10

ProvidentquotesinTamil11

ProvidentquotesinTamil12

ProvidentquotesinTamil13

ProvidentquotesinTamil14

ProvidentquotesinTamil15

ProvidentquotesinTamil16

ProvidentquotesinTamil17

ProvidentquotesinTamil18

ProvidentquotesinTamil19

ProvidentquotesinTamil20

ProvidentquotesinTamil21

ProvidentquotesinTamil22

ProvidentquotesinTamil23

ProvidentquotesinTamil24

ProvidentquotesinTamil25

ProvidentquotesinTamil26

ProvidentquotesinTamil27

ProvidentquotesinTamil28

ProvidentquotesinTamil29

ProvidentquotesinTamil30

ProvidentquotesinTamil31

ProvidentquotesinTamil32

ProvidentquotesinTamil33

ProvidentquotesinTamil34

ProvidentquotesinTamil35

ProvidentquotesinTamil36

ProvidentquotesinTamil37

ProvidentquotesinTamil38

ProvidentquotesinTamil39

ThoughtquotesinTamil40

ThoughtquotesinTamil41

ThoughtquotesinTamil42

ThoughtquotesinTamil43

ThoughtquotesinTamil44

ThoughtquotesinTamil45

ThoughtquotesinTamil46

ThoughtquotesinTamil47

ThoughtquotesinTamil48

ThoughtquotesinTamil49

ThoughtquotesinTamil50

ThoughtquotesinTamil51

ThoughtquotesinTamil52


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content