துன்பத்தைக் கண்டு | உதவி | Help quotes in Tamil - 02
15.தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார்.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
16.உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருளை ஈட்டுகிறோம் என்பதில் இல்லை அந்தப் பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
-தாகூர்
17.துன்பத்தைக் கண்டு இறங்குவது மனித இயல்பு, அதை நீக்குதல் தெய்வப் பண்பு.
-ஜான் மில்டன்
18.தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.
-எமேர்சன்
19.ஜாக்கிரதை! பிறர் செய்யும் உதவி அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள்.
-எமேர்சன்
20.ஒருவரின் கடமை மற்றவரின் மனதை நிறைசெய்வதாக இருந்தால் அதுவே அதற்கு கிடைத்த பரிசாகும்.
-ஜார்ஜ் எலியட்
21.உலகத்திலிருந்து நீ ஏற்பது குறைவாகவும் உலகத்துக்கு நீ வழங்குவது அதிகமாகவும் இருக்கட்டும்.
-வால்டேர்
22.நல்லவர்கள் செய்யும் உதவி, பூமிக்கடியில் இருக்கும் நீர்போல. தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது. ஆனால், பூமியின் மேற்பரப்பில் பயிர்பச்சைகளை செழுமையாக வளரச்செய்யும்.
-தாமஸ் கார்லைல்
23.நீதிநெறியிலிருந்து பிறருக்கு உதவுபவர் மேல் ஜாதியார். மற்றவர் கீழ் ஜாதியர்.
-சுப்பிரமணிய பாரதியார்
24.கொடுக்கும் கொடையைவிட கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது.
-சாணக்கியர்
25.தர்ம காரியங்கள் எதுவும் செய்யாமல் பெறப்படும் புகழ் அழியக்கூடியது.
-ஷேக்ஸ்பியர்
26.பிறர் உங்களைப் புகழவேண்டும் என்பதற்காக மட்டும் தானம் செய்யாதீர்கள்.
-இயேசுநாதர்
27.உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்லவை!
Super Quotes
பதிலளிநீக்கு